ஐபோன் வாங்க கிட்னியை விற்ற வாலிபர் !


  
சீனாவை சேர்ந்த Xiao Zheng என்னும் வாலிபர் ஸ்மார்ட் போன் உலகில் புரட்சி செய்துகொண்டிருக்கும் ஐ பேட் மற்றும் ஐ போன் வாங்குவதற்காக தனது கிட்னியை விற்றுள்ளார் .சீனாவின் தெற்கு மாநிலமான அன்ஹுய் மனிநிலத்தில் வசித்து வரும் இவர் இணையத்தில் கிட்னி வியாபாரம் செய்யும் தரகருடன் ஏற்பட்ட பழக்கத்திலேயே தனது கிட்னியை  £1,825 (Yuan 20,000). விற்பனை செய்துள்ளார்.

 மேலே படத்தில் காணப்படும் நபரே கிட்னி விற்பனை செய்த வாலிபர் தனக்கு ஐபாட்-2  வாங்கவேண்டும்  இதனாலேயே தனது கிட்னியை விற்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இந்த வாலிபரின் தாய் கூறுகையில் " ஒருநாள் மகன் வீட்டிற்கு வரும்போது புது லாப்டாப் மற்றும் ஐபோங்களுடன் வீட்டிற்கு வந்தார் இதற்காக பணம் எங்கிருந்து வந்தது என அதட்டலுடன் கேட்டேன்  நீண்ட மௌனங்களுக்கு பிறகு தனது மேற்சட்டையை தூக்கி காட்டியவாறு தனது கிட்னியை விற்றுள்ளதாக தெரிவித்தார் இந்த அதிர்ச்சியில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது என்றும் உடனடியாக இது சம்பந்தமாக போலீசிலும் முறைப்பாடு செய்ததாக " தெரிவித்தார்.

மேற்படி விசாரணை தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் குறிப்பிட்ட அந்த தரகரை தேடிவருவதாகவும் இதேபோல் அதிகமான வாலிபர்களை தனது வலையில் அந்த தரகர் விழவைதுள்ளதகவும் குறிப்பிட்ட போலீசார் அந்த வைத்தியசாலை கிட்னி சம்பத்தப்பட்ட organ transplan என்னும் சிகிச்சை செய்வதற்கு அனுமதிபெராத வைத்தியசாலை எனவும் தெரிவித்தனர்




6 Responses to “ஐபோன் வாங்க கிட்னியை விற்ற வாலிபர் !”

THOPPITHOPPI said...
June 6, 2011 at 5:27 PM

தொலைக்காட்சியில் பார்த்தேன், இப்படியும் இருக்கானுங்க கொமாளிப்பயளுங்க. இந்தியர்களுக்கு ஆறுதலான விஷயம் நம்மை விட ஆளுங்க இருக்கானுங்க


Unknown said...
June 6, 2011 at 6:13 PM

ஆமா கேள்விப்பட்டேன் பாஸ்...மட்டத்தையும் அறுத்து விடனும் இவங்களுக்கு...கைய சொன்னேன்!!


FARHAN said...
June 7, 2011 at 8:22 AM

THOPPITHOPPI said...
தொலைக்காட்சியில் பார்த்தேன், இப்படியும் இருக்கானுங்க கொமாளிப்பயளுங்க. இந்தியர்களுக்கு ஆறுதலான விஷயம் நம்மை விட ஆளுங்க இருக்கானுங்க

//இவனுங் எல்லாத்தையும் திருத்தமுடியாது பாஸ் //


FARHAN said...
June 7, 2011 at 8:24 AM

மைந்தன் சிவா said...

ஆமா கேள்விப்பட்டேன் பாஸ்...மட்டத்தையும் அறுத்து விடனும் இவங்களுக்கு...கைய சொன்னேன்!!

//நல்ல வேல கைய சொன்னிங்க நா வேற எதையோ நெனசிட்டன் "நான் கால சொன்னன் "
//


palane said...
June 8, 2011 at 11:08 AM

இப்படி பட்ட மனித சென்மங்கள் திருந்த மாட்டார்களா ?


Prabu Krishna said...
June 18, 2011 at 8:55 PM

அடப்பாவிகளா இதுக்கெல்லாம கிட்னிய விப்பானுங்க.


தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/

Post a Comment

My Blog List

,
All Rights Reserved .கருப்பன். |